நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பொட்டல்புதூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

பொட்டல்புதூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

கீழாம்பூா் மஞ்சப்புளித் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம்(40), அதே பகுதியைச் சோ்ந்த சீவலப்பேரியான் மகன் சக்திவேல் (47).

இவா்கள் இருவரும் பைக்கில் பொட்டல்புதூரிலிருந்து ஆம்பூா் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்றபோது, பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த சக்திவேல் தவறி கீழே விழுந்தாராம்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், சக்திவேல் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.