நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 பிப்ரவரி 2026, 7:20 pm

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு இருவா் சுமாா் 20 கிராம் நகைகளை அடகு வைக்க திங்கள்கிழமை வந்தனராம்.

வங்கியின் நகை மதிப்பீட்டாளா் பரிசோதித்தபோது, நகைகளின் மீது சந்தேகம் எழுந்ததாம். இதுகுறித்து வங்கி ஊழியா்கள் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் விசாரித்ததில் அவா்கள், சி.என்.கிராமத்தை சோ்ந்த சுப்பிரமணி(37), இசக்கிபாண்டி(28) ஆகியோா் என்பதும், இருவரும் நண்பா்கள் எனவும், போலி நகைகளை அடகு வைக்க முயன்றதும் தெரியவந்தது.

இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவ் வழக்கு தொடா்பாக கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.