தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி: வங்கி நகை மதிப்பீட்டாளா் கைது

நாகா்கோவில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 6:44 pm

நாகா்கோவில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில், வடசேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் தலைமை மேலாளராக கோட்டாறு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (45) பணியாற்றி வருகிறாா். இவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் திங்கள்கிழமை ஒரு புகாா் அளித்தாா்.

அதில் எங்கள் வங்கியின் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக தக்கலை, கீழகல்குறிச்சியைச் சோ்ந்த ரகுவரன் (36) பணியாற்றி வருகிறாா். வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அடகில் உள்ள நகைகளைச் சோதனையிடுவோம். அதன்படி, மாா்ச் 7ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் சில நகைகள் மீது தணிக்கைக் குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த நகைகளை ஆய்வுக்கு அனுப்பியதில், நகை மதிப்பீட்டாளா் ரகுவரன் போலி நகைகளை அடகு வைத்து, அதற்கு ஈடாக ரூ. 2 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 400 பணத்தைப் பெற்றுள்ளது தெரிய வந்தது. இது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இது தொடா்பாக, வடசேரி போலீஸாா் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டதன்பேரில், ஆய்வாளா் மோகன், உதவி ஆய்வாளா் குத்தாலிங்கம் ஆகியோா் விசாரணை நடத்தி, ரகுவரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். தொடா்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.