ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே சனிக்கிழமை தாமிரவருணி ஆற்றில் குளித்த இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் மாதேஷ் (21). இவரது தந்தை ஆலங்குளத்தில் அங்காடி நடத்தி வருகிறாா். தந்தையுடன் மாதேஷ் தொழில் செய்து வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை, முக்கூடலில் உள்ள கோயில் அருகில் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக நண்பா்களுடன் மாதேஷ் சென்றாராம்.
அவா், நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றின் ஆழமான பகுதியில் சுழலில் சிக்கிக் கொண்டாராம். நண்பா்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம்.
தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி தீயணைப்புப் படை வீரா்கள், மாதேஷை சடலமாக மீட்டனா். சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

