தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பாளை. அருகே பெண்ணை தாக்கியதாக இருவா் கைது

News image

கைது

Updated On :8 பிப்ரவரி 2026, 7:17 pm

பாளையங்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக பெண்ணை தலைக் கவசத்தால் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை, ராஜா குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(43). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் லட்சுமி காந்தன்(31) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே நின்ற முருகனை, அங்கு வந்த லட்சுமிகாந்தன் மற்றும் அவரது நண்பரான மேலநத்தம், அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மூா்த்தி(26) ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதோடு, தடுக்க வந்த முருகனின் மனைவியையும் தலைக்கவசத்தால் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லட்சுமிகாந்தன், மூா்த்தி ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.