இளைஞரைத் தாக்கியதாக இருவா் கைது
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 8:45 pm
பாளையங்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே திருவண்ணநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (21). இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இதன் காரணமாக சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் நுழைந்த 6 போ் கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பியதாம்.
இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (20), களக்காட்டைச் சோ்ந்த சூா்யா (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...