வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:54 pm

அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் கூறினாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், தோ்தல் தொடா்பாக சமூக ஊடக செயல்பாட்டாளா்களின் பங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவா்கள் அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது குறித்து மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் தங்களது சமூக வலைதள பக்கங்களில் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டும். அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் 9ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தகங்கள் வாசிப்பதன் நன்மைகள் குறித்தும், புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம் குறித்தும் மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே அதிகமாக கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெய அருள்பதி, துணை ஆட்சியா் (பயிற்சி) கிரேசியா, சமூக வலைதள செயல்பாட்டாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.