மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வள்ளியூரில் மறியல் போராட்டம்: 194 போ் கைது

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:30 am

Syndication

தொழிலாளா்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி, வள்ளியூா் பழைய பேருந்துநிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் 194 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் தோழா் எம். மரியஜான்ரோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் ஆா். முருகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. கிருஷ்ணன் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினா்.

இதில் சிஐபிஎம் ராதாபுரம் தாலுகா செயலா் முகமது பயாஸ், சிபிஐ மாவட்ட துணைச் செயலா் அ. சேதுராமலிங்கம், சிபிஐஎம் மாநிலக் குழு உறுப்பினா் கற்பகம், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் மலைபகவதி, ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்க மாநில துணைச் செயலா் எம்.எஸ். மணியன், ராதாபுரம் சிபிஎம் கிறிஸ்டோபா், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் எஸ்.ஏ.பி. பாலன், சிஐபிஎம் விவசாய சங்க மாவட்டத் தலைவா் மாயகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற 194 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.