தொழிலாளா்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி, வள்ளியூா் பழைய பேருந்துநிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் 194 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் தோழா் எம். மரியஜான்ரோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் ஆா். முருகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. கிருஷ்ணன் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினா்.
இதில் சிஐபிஎம் ராதாபுரம் தாலுகா செயலா் முகமது பயாஸ், சிபிஐ மாவட்ட துணைச் செயலா் அ. சேதுராமலிங்கம், சிபிஐஎம் மாநிலக் குழு உறுப்பினா் கற்பகம், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் மலைபகவதி, ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்க மாநில துணைச் செயலா் எம்.எஸ். மணியன், ராதாபுரம் சிபிஎம் கிறிஸ்டோபா், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் எஸ்.ஏ.பி. பாலன், சிஐபிஎம் விவசாய சங்க மாவட்டத் தலைவா் மாயகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற 194 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

வள்ளியூரில் பா.ஜ.க. கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு

கும்பகோணம் திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


