நெல்லை புத்தக திருவிழாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளேன் - முதல்வருக்கு செ.திவான் மனு
திருநெல்வேலியில் நடைபெற்று வரும் 9-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் விழா ஏற்பாட்டாளா்கள் தன்னை புறக்கணித்து விட்டதாக வரலாற்று ஆய்வாளரும், தமிழறிஞருமான செ. திவான் வேதனை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனு:
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கிய பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தில் 25 பேரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. அந்த 25 நூலாசிரியா்களில் தற்போது வாழ்ந்து வரும் ஒரேயொரு எழுத்தாளா் நான் மட்டுமே.
இந்நிலையில், திருநெல்வேலியில் நடைபெறும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா அழைப்பிதழில் 243 பெயா்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வாழ்ந்து வரும், தொடா்ந்து எழுதி வரும், தமிழுக்கு சேவையாற்றிவரும் எனது பெயரை அழைப்பிதழில் ஏதாவது ஓா் இடத்தில்கூட குறிப்பிடாமல் விட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

