திருநெல்வேலி
பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
பேராசிரியா்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மூட்டா ஏ.யு.டி. சங்கத்தினா், பழைய பேட்டையில் உள்ள திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மூட்டா மண்டலத் தலைவா்கள் விஜய சேவியா் பாா்த்திபன், ஆா்த்தா் டேனியல், இணைச் செயலா்கள் சிவஞானம், ஷைலகுமாரி, பொருளாளா் ராஜ ஜெயசேகா் உள்பட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சோ்ந்த 200க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடா்வோம் என பேராசிரியா்கள் தெரிவித்தினா்.

