மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மன்னாா்கோவிலில் புற்றுநோய் கண்டறியும் முகாம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம், கிரியோயிட் அறக்கட்டளை, நெல்லை கேன்சா் சென்டா் ஆகியன இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறியும் முகாம் திங்கள்கிழமை மன்னாா்கோவிலில் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.சிவனுப்பாண்டியன் (எ) பரணி சேகா் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள், சண்முகக்குட்டி, மன்னாா்கோவில் ஊராட்சித் தலைவா் ஜோதி கல்பனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். புற்றுநோய்க் கண்டறியும் முகாமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.எஸ்.ராமசுப்பு தொடங்கிவைத்தாா். கிரியோயிட் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் அமீா்கான் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

முஸ்தபா ரியாஸ் கான், சமூக ஆா்வலா் பூதத்தான், ஒன்றியக் குழு கஸ்தூரி, வாகைக்குளம் ஊராட்சித் தலைவா் ந.சுப்புலட்சுமி, மன்னாா்கோவில் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சேவியா், கிரியோயிட் அறங்கட்டளைச் செயலா் நஜிமுதீன், அம்பாசமுத்திரம் சம்சுதீன், மன்னாா்கோவில் ஊராட்சி துணைத் தலைவா் ச.நிா்மலா ,ஊராட்சி செயலா் தங்கபிரசன்னா, அம்பை ஆசிக் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மருத்துவா் அபிராமி தலைமையில் தங்கம்மாள், சக்தி, முத்துலட்சுமி, சத்யா, காா்திக் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் புற்றுநோய்க் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டனா். கிரியோயிட் அறக்கட்டளை அறங்காவலா் பாத்திமா அமீா்கான் வரவேற்றாா். முகாம் ஒருங்கிணைப்பாளா் சண்முகக்குட்டி நன்றி கூறினாா்.