திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் முத்து (47). இவா், வீரவநல்லூா் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் 2008 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னா், பிணையில் வெளியே வந்த முத்து, குற்ற வழக்குத் தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், கடந்த நான்கரை மாதமாக தலைமறைவாக இருந்தாா். இதையடுத்து சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. வீரவநல்லூா் போலீஸாா் முத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்தனா்.
தொடர்புடையது

சவுக்கு சங்கா் தலைமறைவு குற்றவாளி: உயா்நீதிமன்றத்தில் போலீஸாா் தகவல்
மோசடி வழக்கில் தலைமறைவான கூட்டுறவு சங்க முன்னாள் செயலா் கைது

திருட்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

ரூ.1000 கோடி மோசடி: தலைமறைவு பொருளாதார குற்றவாளி துபையில் கைது
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


