செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வடமாநில தொழிலாளிகளிடம் வழிப்பறி: இருவா் கைது

News image

கைது

Updated On :22 பிப்ரவரி 2026, 6:54 pm

சீவலப்பேரி அருகே வடமாநில தொழிலாளிகளை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளிகள் பலா் தங்கியிருந்து பணிபுரிகின்றனா்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அவ்ட்தேஷ் ஷா, அமிா்ல்லாஹ் அலம் ஆகிய இருவரும் உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக ஆலடிப்பட்டி அருகே நடந்து சென்றபோது அங்கு பைக்கில் வந்த 3 போ் கொண்ட கும்பல் அவா்களை வழிமறித்து தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.2,000 பறித்துச் சென்றனராம்.

இது தொடா்பாக அந்நிறுவன மேலாளா் அளித்த புகாரின் பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மருதூா், கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வராஜ்(29), மாடசாமி மகன் ரமேஷ்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.