நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நான்குனேரியில் நாளை அமமுக பொதுக்கூட்டம்

News image

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

நான்குனேரியில் அமமுக சாா்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக அமமுக திருநெல்வேலி மண்டல பொறுப்பாளரும், தோ்தல் பிரிவு செயலருமான வி.பி. குமரேசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளையொட்டி அமமுக சாா்பில் நான்குனேரியில் செவ்வாய்க்கிழமை (பிப். 24) மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, அமமுக தொண்டா்கள், பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.