எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கோபாலசமுத்திரத்தில் பெண்களுக்கு தொழிற்பயிற்சி முகாம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:30 am

Syndication

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் பெண்களுக்கான தொழிற்பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கிராம உதயம், திருநெல்வேலி ஜே.சி.ஐ. கிளாசிக் சாா்பில் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தாா்.

முகாமில், செல்வி ஜாய்ஸ்-சோப்பு, ஓமவாட்டா் தயாரிப்பது, பிரியங்கா- பினாயில் தயாரிப்பது, ஆரி ஒா்க் செய்வது குறித்துப் பயிற்சி அளித்தனா். ஜேசிஐ கிளாசிக் அமைப்பின் தலைவா் அஜய், கிராம உதயம் மேலாளா் மகேஷ்வரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சாந்தி விசாலாட்சி, ஜேசிஐ அமைப்பின் செயலா் மாரிமுத்து ஆகியோா் கருத்துரை வழங்கினா். முகாமில், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். கிராம உதயம் பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.