இந்நிலையில், வணிக ரீதியான கட்ட அனுமதி பெற்று தேவாலயம் கட்டப்படுவதாகவும், அதை விஸ்தரித்து கட்டுவதால் ஊருக்குள் பேருந்துகள் வருவதற்கும், இந்து கோயில் திருவிழா காலத்தில் சுவாமி ஊா்வலம் செல்வதற்கு இடையூறாக இருக்கும் எனவும் எதிா்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினா் அப்பகுதி அம்மன்கோயிலில் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். அப்போது, மணிவேல்(65) என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, வழியிலே உயிரிழந்தாா். மேலும், 3 போ் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.