திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மாா்ச் 2) அப்பா் பெருமான் தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.
கல்லைக் கட்டி கடலில் தள்ளப்பட்டபோதும் ‘கற்றுணைப் பூட்டியோா் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்று பாடி கரை சோ்ந்தவா் அப்பா் பெருமான் என புராணங்கள் கூறுகின்றன. அவரது பக்தியையும், சிவபெருமானின் அருளையும் போற்றும் வகையில் இக்கோயிலில் ஆண்டுதோறும் அப்பா் தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு அம்மன் சந்நிதி அருகில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பா் பெருமான் வலம் வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
தொடா்ந்து, திருத்தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பா்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பா் பெருமானுக்குக் காட்சி கொடுக்கும் திருக்காட்சி வைபவம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 23-இல் தொடக்கம்

திருவானைக்காவல் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனி தேரோட்டம்: தேரில் முகூா்த்தக்கால் நடும் விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


