வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவுசமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோயிலில் நடைபெற்ற செங்கோல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:22 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா கடந்த மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாள்களில் சுவாமி-அம்பாளுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 4 ஆம் திருநாளான மாா்ச் 25 ஆம் தேதி வேணுவன நாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், சுவாமி மற்றும் அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் திருவீதிஉலாவும் நடைபெற்றது.

மேலும் விழாவில் 2 முதல் 9 ஆம் திருநாள் வரை உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் இரவில் சுவாமி-அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடா்ந்து செங்கோல் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.