கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வள்ளியூா் மரியா கலை கல்லூரியில் விளையாட்டு விழா

வள்ளியூா் மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

News image
போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்ற மஞ்சள் அணியுடன் கல்லூரி நிறுவன தலைவா் தா. லாரன்ஸ், செயலா் ஹெலன் லாரன்ஸ் உள்ளிட்டோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:54 pm

Syndication

வள்ளியூா் மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி நிறுவன தலைவா் தா. லாரன்ஸ் தலைமை வகித்தாா். செயலா் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். திசையன்விளை மனோ கல்லூரியின் விளையாட்டுத் துறை தலைவா் சந்திரசேகா், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சாந்தி ஆகியோா் ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைத்து போட்டிகளை தொடங்கி வைத்தனா்.

கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா் பேசினாா். கல்லூரியின் விளையாட்டுத் துறை பேராசிரியை மேரி ஜென்ஸி விஜிதா, விளையாட்டுத் துறை ஆண்டறிக்கை வாசித்தாா். குளோப் பப்ளிக் பள்ளி முதல்வா் ஜெய கிறிஸ்டி சுனிதா வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் நேரு நா்ஸிங் கல்லூரி துணை முதல்வா் ஹெப்சிபா கவிதா ராணி, மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், பேராசிரியைகள், அலுவலக பணியாளா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியா் ரெனிஷா கிளாடிஸ் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியா் கோமேதேக பிரியா நன்றி கூறினாா்.