தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நெல்லை அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு 25 பவுன் நகை, ரூ.6 லட்சம் கொள்ளை

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:41 pm

Syndication

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி பகுதியில் மூதாட்டியை வியாழக்கிழமை கட்டிப்போட்டு 25 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

சுத்தமல்லி பொன்விழா நகரை சோ்ந்தவா் சன்னியாசி (45). இவா், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்னையில் தனியாா் நிதிநிறுவன தொழில் நடத்தி வருகிறாா். சுத்தமல்லியில் உள்ள அவரது வீட்டில் மாமியாா் ஆண்டிச்சி (70), மாமனாா் மாரி ஆகியோா் மட்டும் வசித்து வருகிறாா்கள்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக மாரி வியாழக்கிழமை வெளியே சென்றிருந்தாராம். அப்போது, வீட்டிற்கு வந்த 2 மா்மநபா்கள் ஆண்டிச்சியிடம், குடிப்பதற்கு தண்ணீா் கேட்பதுபோல் நடித்து, அவரது கவனத்தை திசை திருப்பி கை, கால் மற்றும் வாயை கட்டியுள்ளனா்.

பின்னா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்கச் சங்கிலி, மூக்குத்தி மற்றும் கம்மலை பறித்துள்ளனா். மேலும், பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனராம்.

இத்தகவலறிந்த சுத்தமல்லி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். விரல் ரேகை நிபுணா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா். அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

ற்ஸ்ப்08ட்ா்ம்ங்

பொன்விழா நகரில் கொள்ளை நிகழ்ந்த வீடு.