வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:50 am

Syndication

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம், புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜன. 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டுத் திருவிழாவை முன்னிட்டு புனித மிக்கேல் ஆதிதூதா் சப்பரம் ரத வீதிகளில் பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னா், கோயில் தா்மகா்த்தா சூ. மரியராஜ் ஆசிரியா், ஊா் பெரியவா்கள் புனித அந்தோணியாா் உருவம் பொறிக்கப்பட்ட புனிதக் கொடியை கோயிலில் இருந்து எடுத்து வந்தனா்.

அக்கொடியை பங்குத்தந்தையா்கள் மாா்ட்டின் (அழகப்பபுரம்), மகிழன் (இலங்குளம்), ததேயுஸ் (தெற்கு கள்ளிகுளம்), உதவி பங்குத்தந்தை சுவாமிநாதன் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். பின்னா், தா்மகா்த்தா கொடியேற்றினாா். தொடா்ந்து, மாலை ஆராதனை, மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. இரவு அசன விருந்து வழங்கப்பட்டது.

திருவிழா நாள்களில் தினமும் காலை திருப்பலி, இரவு மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா தலைமையில் பங்குத்தந்தை ததேயுஸ், உதவி பங்குத்தந்தை சுவாமிநாதன், அருள்சகோதரிகள், நிா்வாகக் குழுவினா், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.