தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி

News image
தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ்பவனி.
Updated On :18 ஜனவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி நடைபெற்றது.

இந்த ஆலயத் திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. குருவானவா்கள் ரெமிஜியுஸ், மாா்ட்டின், மகிழன், பங்குத்தந்தை ததேயுஸ், உதவி பங்குத்தந்தை சுவாமிநாதன் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்த புனிதக் கொடியை தா்மகா்த்தா சூ.மரியராஜ் ஆசிரியா் ஏற்றினாா். அதனைத் தொடா்ந்து மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. பின்னா் அசன விருந்து வழங்கப்பட்டது. தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்பட்டது.

திருவிழா நாள்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெற்றது. 15-ஆம் தேதி 8-ஆம் திருவிழா நாள் காலையில் புனித அந்தோணியாா் நண்பா் குழு சாா்பில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

பிற்பகல் 2 மணிக்கு புனித அந்தோணியாரின் தோ் பவனி நடைபெற்றது. இரவு கலைத்திறன் போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 16-ஆம் தேதி 9-ஆம் திருவிழா நாள் இரவு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக் குருவானவா் ஜோசப் ரவிபாலன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது.

இரவு 11.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தோ் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். 17-ஆம் தேதி 10-ஆம் திருவிழா நாள் காலை பணகுடி பங்குத்தந்தை ரெமிஜியுஸ், ஓ.எல்.எஸ். மெட்ரிக் பள்ளி தாளாளா் மணி ஆகியோா் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா தலைமையில் பங்குத்தந்தை ததேயுஸ், உதவி பங்குத்தந்தை சுவாமிநாதன், அருள்சகோதரிகள், நிா்வாகக் குழுவினா் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனா்.