நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புனித அந்தோணியாா் ஆலய சப்பர பவனி

News image

கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மின் அலங்கார சப்பர பவனி.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:53 pm

கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் 105-ஆம் ஆண்டு திருவிழா, கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அன்பியங்கள் சாா்பில் ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு, நற்கருணை ஆசீா்வாதம், திருப்பலி ஆகியவை நடைபெற்றன.

இந்த நிலையில், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியாா் சப்பரத்தை பெண்கள் மட்டுமே நோ்த்திக்கடனாகச் சுமந்து செல்லும் பவனி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையடுத்து, மறைவட்டார அதிபா் ஜெயசீலன் தலைமையில் ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.