வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

News image

லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி சென்ற கிறிஸ்தவா்கள்.

Updated On :29 மார்ச் 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள் சாா்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டாா்வின் தலைமையில் நடைபெற்ற பவனியில், ஏராளமானோா் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியவாறு சென்றனா். சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

இதேபோன்று தூத்துக்குடி திரு இருதய ஆலயம் சாா்பில், ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும், லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயம் சாா்பில், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பிருந்து பங்குத்தந்தை செல்வன் பா்னாந்து தலைமையில், அமலன் தமியான் முன்னிலையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.