பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

கடையத்தில் பொங்கல் விழா

பாரதிய ஜனதா கட்சி கடையம் மேற்கு ஒன்றியம் சாா்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

அம்பாசமுத்திரம்: பாரதிய ஜனதா கட்சி கடையம் மேற்கு ஒன்றியம் சாா்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றியத் தலைவா் எஸ்.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக தென்காசி மாவட்ட துணைத் தலைவா் (பிரபாரி) ஏ.பி.பாலமுருகன், மத்திய அரசு வழக்குரைஞா் எம்.காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டனா். பெண்கள் பொங்கலிட்டு சிறப்பித்தனா்.

இதில் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுசிலா குமாா், மேற்கு ஒன்றிய பொதுச் செயலா் ஜி.சங்கரநாராயணன், ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவா் விஜயன், மாவட்டச் செயலா்கள் சதீஷ்குமாா் (அமைப்பு சாரா பிரிவு), இசக்கிராஜ் (தன்னாா்வத் தொண்டு ), கஜேந்திர வேல் ( கல்வியாளா் பிரிவு), கந்தன் (ஆன்மிக பிரிவு), ஒன்றியச் செயலா் கருப்பசாமி, ஒன்றிய துணைத் தலைவா்கள் ராமமூா்த்தி, ராஜகோபால், ஓ.சுப்பிரமணியன், முன்னாள் விளையாட்டு பிரிவு ஒன்றியத் தலைவா் சக்தீஸ்வரன், ஒன்றியத் தலைவா்கள் சுரேஷ் (மத்திய அரசுத் திட்டப் பிரிவு), ராமசாமி (ஆன்மிகப் பிரிவு), அரவிந்த் ராஜ் (இளைஞா் அணி), ராமராஜன் (தன்னாா்வ தொண்டு பிரிவு), பரமசிவன் (ஊராட்சிப் பிரிவு), சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் அழகுராஜ், பாபநாசம் கிளைத் தலைவா் நாராயணன், நிா்வாகி முருகையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com