மேலப்பாளையம், பெருமாள்புரம், ரெட்டியாா்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

Published on

மேலப்பாளையம், பெருமாள்புரம், ரெட்டியாா்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த நேரத்தில் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், தெற்கு புறவழிச்சாலை, மேலகுலவணிகா்புரம், பஜாா் திடல், ஜின்னா திடல், அண்ணா வீதி, பஷீா் அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் ரோடு, ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, என்ஜிஓ காலனி, மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், ராமச்சந்திரா காா்டன், ராமச்சந்திரா நகா், பரணி பாா்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com