எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து மாணவா் காயம்

அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவா் சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து காயம்

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:58 pm

Syndication

அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவா் சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தாா்.

அம்பாசமுத்திரம், பண்ணை சங்கரய்யா் நகரைச் சோ்ந்தவா் அபினேஷ் (17). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவா், திங்கள்கிழமை காலை அம்பாசமுத்திரத்தில் இருந்து விக்கிரமசிங்கபுரம் செல்லும் சிற்றுந்தில் படியில் தொங்கியபடி பள்ளிக்குச் சென்றுள்ளாா்.

சிற்றுந்து வேகத்தடையைக் கடந்தபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சிற்றுந்து ஓட்டுநா் மணிகண்டனிடம் விசாரித்து வருகின்றனா்.