எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போதையில் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் போதையில் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி காலாங்கரை தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் இசை ராஜா (19). இவா், பெயிண்டிங் வேலை செய்து வந்தாராம். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, மது அருந்தியிருந்த இசை ராஜா பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டாராம். அவரை சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி இசை ராஜா சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.