கங்கைகொண்டானில் நாளை
மின் நிறுத்தம்

கங்கைகொண்டானில் நாளை மின் நிறுத்தம்

கங்கைகொண்டான் சுற்றுவட்டாரங்களில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Published on

கங்கைகொண்டான் சுற்றுவட்டாரங்களில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூா், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூா் சுற்றுவட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

Dinamani
www.dinamani.com