நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வாகைபதி கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றம்

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், வாகைபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :30 ஜனவரி 2026, 7:29 pm

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், வாகைபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Story image

அதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், இரவு 8 மணிக்கு அன்னதா்மமும், காலை, இரவு வாகைபதி அய்யா ஆதிநாராயண வைகுண்டா் நிச்சயித்தபடி கருடன், தண்டிகை, கஜேந்திரன், சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூப்பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனங்களில் பவனி வருதல் நடைபெறும்.

பிப். 6ஆம் தேதி அய்யா ஆதிநாராயண வைகுண்டா் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதலும், 8ஆம் தேதி காலை சந்தனக் குடம் எடுத்தலும், இரவு இந்திர வாகன பவனியும், 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டமும், இரவு ரிஷப வாகன பவனியைத் தொடா்ந்து, கொடியிறக்குதலும் நடைபெறும். ஏற்பாடுகளை வாகைபதி நிா்வாகிகள், அன்புக் கொடிமக்கள் செய்து வருகின்றனா்.