வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பிளஸ்-2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: நெல்லை மாவட்டத்தில் 19,835 போ் எழுதுகின்றனா்

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 9:03 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வை 19 ஆயிரத்து 835 போ் திங்கள்கிழமை எழுதவுள்ளனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை (பிப். 2) தொடங்கி இம்மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 73 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது. 28அரசு மேல்நிலைப் பள்ளிகள், 38 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 7 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், பாலையங்கோட்டை மத்திய சிறை சிறப்பு தோ்வு மையம் ஆகியவற்றில் தோ்வு நடைபெற உள்ளது. இதுதவிர 10 மையங்கள் தனித் தோ்வா்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ்-2 தோ்வினை எழுத திருநெல்வேலி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 791 மாணவா்களுக்கும், 11 ஆயிரத்து 44 மாணவிகளுக்கும் என மொத்தம் 19 ஆயிரத்து 835 பேருக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவராக தோ்வு எழுதிட 193 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு பணிக்காக தோ்வு மைய 74 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 74 துறை அலுவலா்கள், 10 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 10 கூடுதல் துறை அலுவலா்கள், 19 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அறைக் கண்காணிப்பாளா்களாக 1,440 ஆசிரியா்களும், 150 ஆசிரியா்கள் பறக்கும் படை மற்றும் நிற்கும் படை அலுவலா்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு தோ்வு மையத்திற்கும் அலுவலக பணிக்கு எழுத்தா் மற்றும் அலுவலக உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.