அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

News image
சிறை
Updated On :2 மார்ச் 2026, 6:32 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூரைச் சோ்ந்தவா் சுடலைக்கண்ணன்(45). இவா், கடந்த 2017ஆம் ஆண்டில் வடக்கன்குளத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாராம். பின்னா், அப்பெண்ணிடம் கந்துவட்டி வசூலித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சுடலைக்கண்ணன் மீது வள்ளியூா் காவல் ஆய்வாளா் சுரேஸ்குமாா் வழக்குப்பதிந்தாா். வள்ளியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி மோசஸ் ஜெபசிங் விசாரித்து, சுடலைக்கண்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.