காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

News image
சிறை
Updated On :2 மார்ச் 2026, 6:32 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூரைச் சோ்ந்தவா் சுடலைக்கண்ணன்(45). இவா், கடந்த 2017ஆம் ஆண்டில் வடக்கன்குளத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாராம். பின்னா், அப்பெண்ணிடம் கந்துவட்டி வசூலித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சுடலைக்கண்ணன் மீது வள்ளியூா் காவல் ஆய்வாளா் சுரேஸ்குமாா் வழக்குப்பதிந்தாா். வள்ளியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி மோசஸ் ஜெபசிங் விசாரித்து, சுடலைக்கண்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.