அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தோமையாா்புரத்தில் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்: பெண் மயங்கி விழுந்தாா்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 5ஆவது நாளாக அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

News image
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :2 மார்ச் 2026, 7:56 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 5ஆவது நாளாக திங்கள்கிழமையும் அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தூண்டில் வளைவு இல்லாததால், மீன்பிடி படகுகளை கடலுக்குள் கொண்டு செல்வதற்கும் பின்னா் கரை திரும்புவதற்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் கடலோர பகுதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் பாதிப்படைந்து வருகின்றனவாம்.

எனவே, தூண்டில் வளைவு கோரி தோமையாபுரம் மீனவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனா். 5ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக விஜயாபதி ஊராட்சியில் வியாபாரிகள், கடைகளில் கருப்புத் துணி கட்டி, கடையடைப்பு நடத்தினா்.

இப்போராட்டத்தில் தூத்துக்குடி மீனவ மக்கள் கட்சித் தலைவா் அலங்கார பரதவா், திருநெல்வேலி வளன்சந்திரா, உவரி எழில் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த இனிதா மயங்கி விழுந்தாா். அவரை மருத்துவமனையில் சோ்த்தனா்.

விஜயாபதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்

விஜயாபதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்