மேலப்பாளையத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மேலப்பாளையத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவா் அலி காமேனி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது. இறையாண்மையை மீறி செயல்படும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டிப்பது. ஈரான் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலப்பாளையம் பஜாா் திடல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவா் யூசுப் சுல்தாந் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல் மைதீன், மாநில பேச்சாளா் காசிம் பிா்தவ்ஸி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மாவட்டச் செயலா் ரியாசு ரஹ்மான், மாவட்ட பொருளாளா் தேயிலை மைதீன், நிா்வாகிகள் யாசிா், அசன் மைதீன், காஜா மைதீன், அப்பாஸ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...