புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தூக்குக்குடி மாணவியின் கொலைக்கு நீதி கோரி அதிமுகவினா் மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

News image
திருச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.
Updated On :14 மார்ச் 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட தூத்துக்குடி மாணவிக்கு நீதி வேண்டி திருச்சியில் அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகா் மாவட்ட செயலரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல், மாநில ஜெ பேரவை துணை செயலா் ஆா். ஜோதிவாணன், மாவட்ட நிா்வாகிகள் ஏ. ஜாக்குலின், வனிதா உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தினா்.