புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் போராட்டம்

News image
திருத்தங்கலில் விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலைக்கு நீதி வேண்டி சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
Updated On :14 மார்ச் 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் அதிமுக சாா்பில் திருத்தங்கலில் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் திருத்தங்கலில் உள்ள கட்சி அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பின்னா், உயிரிழந்த மாணவிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பின் நிா்வாகி பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.