விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைதானவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழக அரசுத் தரப்பிலும், விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவியின் பெற்றோா் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விவரம்:
விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்மமுனீஸ்வரனை காவல் துறையினா் கைது செய்தனா்.
ஏற்கெனவே மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற வழக்கில் இவா் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், இவருக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் வெளியே இருந்த போதுதான் விளாத்திகுளம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றாா். எனவே, மூதாட்டி கொலை வழக்கில் இடைக்கால பிணை வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுக்களில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மூதாட்டி கொலை வழக்கில் தா்மமுனீஸ்வரனுக்கு இடைக்கால பிணை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ‘இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, இதை முடித்து வைத்தனா் நீதிபதிகள்.
தொடர்புடையது
பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நிறைவு

பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் பிணையை ரத்து செய்ய உயா்நீதிமன்றத்தில் காவல்துறை வலியுறுத்தல்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிப்பதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



