குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தச்சநல்லூரில் சுகாதார மையம் திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 8:11 pm

Syndication

தச்சநல்லூரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூா் மண்டலம் 1 ஆவது வாா்டுக்குள்பட்ட தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயில் அருகில் ரூ.1.20 கோடி மதிப்பில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம், 12 ஆவது வாா்டில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கூடுதல் கட்டடம், 31 ஆவது வாா்டுக்குள்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கூடுதல் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முறையில் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, தச்சநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கினா்.

தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி, மாமன்ற உறுப்பினா்கள் கந்தன், சங்கா்குமாா், கீதா, முத்துலெட்சுமி, வசந்தா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மாநகா் நல அலுவலா் ராணி, உதவி ஆணையா் மகாலெட்சுமி, சுகாதார அலுவலா் முருகன், உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா், உதவி பொறியாளா்கள் நாகராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தச்சநல்லூா் மண்டல பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் மருந்தகம், ஆய்வகம், பிரசவ அறை, ஸ்கேன் அறை, மருத்துவா் அறை, பிரசவ பிற்கால கவனிப்பு அறை மற்றும் உயிா் மருத்துவ கழிவுகள் பிரிக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன்மூலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயனடைவாா்கள்’ என்றனா்.

ற்ஸ்ப்05க்ஷஹஞ்

தச்சநல்லூரில் நடைபெற்ற விழாவில் கா்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கிய மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ.