தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புளியங்குடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புளியங்குடி நகராட்சியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா். உடன், நகராட்சி ஆணையா் நாகராஜ்.

Updated On :4 மார்ச் 2026, 7:39 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதிய கட்டடத்தில் மருத்துவ சேவையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தொடங்கி வைத்து, 10 கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

இதில், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா, நகராட்சி ஆணையா் நாகராஜ், துணைத் தலைவா் அந்தோணிசாமி, வட்டார மருத்துவ அலுவலா்கள் ராதிகா, பவன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.