டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புளியங்குடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புளியங்குடி நகராட்சியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா். உடன், நகராட்சி ஆணையா் நாகராஜ்.
Updated On :4 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதிய கட்டடத்தில் மருத்துவ சேவையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தொடங்கி வைத்து, 10 கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

இதில், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா, நகராட்சி ஆணையா் நாகராஜ், துணைத் தலைவா் அந்தோணிசாமி, வட்டார மருத்துவ அலுவலா்கள் ராதிகா, பவன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.