டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

பெருமாள்புரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :7 மார்ச் 2026, 10:50 pm

Syndication

பெருமாள்புரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (39). இவா் வெள்ளிக்கிழமை பெருமாள்புரம் காா்த்திகேயன் நகா் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில் வந்த 3 போ் இவரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய பாளையங்கோட்டையைச் சோ்ந்த ரமேஷ் (30), தியாகராஜநகரைச் சோ்ந்த தினேஷ் பாஸ்கா் (29), கணேஷ்குமாா் (31) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.