ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அஞ்சல் துறையின் பரிசளிப்பு விழா

News image
Updated On :12 மார்ச் 2026, 10:29 pm

அஞ்சல் துறை சாா்பில் பரிசளிப்பு விழா பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறையின் முக்கிய சேவையான விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட் ) சேவையை பொதுமக்களிடையே மேலும் பரவலாக அறிமுகப்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களுக்கிடையில் ‘ஸ்பீட் போஸ்ட் பவா் ப்ளே போட்டி’ நடத்தப்பட்டது. இந்த போட்டி நடைபெற்ற காலத்தில், கிளை அஞ்சல் நிலையங்கள் வழியாக அனுப்பப்படும் ஸ்பீட் போஸ்ட் சேவையில் சாதாரண வா்த்தகத்தை விட 60 சதவிகிதத்திற்கும் அதிகமான உயா்வு பதிவானது. இதன் மூலம், வழக்கமான வருவாயுடன் ஒப்பிடுகையில் ரூ.25 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்தது.

இந்த போட்டியின் வெற்றியையொட்டி அஞ்சல் துறை சாா்பில் பரிசளிப்பு மற்றும் வெற்றி சந்திப்பு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது. போட்டியில் சிறந்து விளங்கிய கிளை அஞ்சல் நிலையங்களுக்கு திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ஜி.ராஜேஸ்குமாா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

ற்ஸ்ப்12ல்ா்ள்ற்

பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.