47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாளை.யில் கருப்புக்கொடி: போலீஸாா் விசாரணை

பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் திங்கள்கிழமை கயிற்றில் கருப்புக்கொடிகளை கட்டி தொங்கிடவிடப்பட்டது

News image
பாளையங்கோட்டை தெற்கு கடைவீதியில் திங்கள்கிழமை தொங்கவிடப்பட்டிருந்த கருப்புக்கொடிகள்.
Updated On :16 மார்ச் 2026, 10:36 pm

Syndication

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் திங்கள்கிழமை கயிற்றில் கருப்புக்கொடிகளை கட்டி தொங்கிடவிடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி மா்மநபா்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, திருநெல்வேலி அருகேயுள்ள ராஜபதியில் ஞாயிற்றுக்கிழமை ஊா்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி பகுதியில் உள்ள தெருக்களில் திங்கள்கிழமை கருப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. இவை, மாணவி கொலையைக் கண்டித்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.