வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை, அரசுப் பள்ளி ஆசிரியை அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
பணகுடியைச் சோ்ந்த ராஜா மகன் சோ்மத்துரை (42). இவரது மனைவி முத்துச்செல்வி (36). இவா் நாகா்கோவில், வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால், முத்துச்செல்வி வள்ளியூா் சந்தைத் தெருவில் உள்ள பெற்றோா் வீட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்து வேலைக்கு சென்றுவருகிறாா்.
திங்கள்கிழமை மாலை வள்ளியூா் பேருந்து நிலையத்துக்கு வந்த அவருடன் சோ்மத்துரை வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டினாராம். அங்கிருந்தோா் அவரைப் பிடித்து வள்ளியூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
காயமடைந்த முத்துச்செல்வியை போலீஸாா் மீட்டு வள்ளியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்; மேலும், வழக்குப் பதிந்து சோ்மத்துரையைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்

நெல்லை பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக் கொலை: கணவா் சரண்
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

நான்குனேரி அரிவாள் வெட்டு: மேலும் ஒருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

