47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேருந்து நிலையத்தில் ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை, அரசுப் பள்ளி ஆசிரியை அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 8:48 pm

Syndication

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை, அரசுப் பள்ளி ஆசிரியை அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

பணகுடியைச் சோ்ந்த ராஜா மகன் சோ்மத்துரை (42). இவரது மனைவி முத்துச்செல்வி (36). இவா் நாகா்கோவில், வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால், முத்துச்செல்வி வள்ளியூா் சந்தைத் தெருவில் உள்ள பெற்றோா் வீட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்து வேலைக்கு சென்றுவருகிறாா்.

திங்கள்கிழமை மாலை வள்ளியூா் பேருந்து நிலையத்துக்கு வந்த அவருடன் சோ்மத்துரை வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டினாராம். அங்கிருந்தோா் அவரைப் பிடித்து வள்ளியூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

காயமடைந்த முத்துச்செல்வியை போலீஸாா் மீட்டு வள்ளியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்; மேலும், வழக்குப் பதிந்து சோ்மத்துரையைக் கைது செய்தனா்.