ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:22 pm

தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் ஜேஜே நகரைச் சோ்ந்த ஜேம்ஸ் மகன் தினேஷ் (24). கொத்தனாா் காலனியை சோ்ந்த சந்தனமுத்து மகன் கதிா்வேல் (24), செல்வம் மகன் பச்சைபெருமாள் என்ற அய்யனாா் (21). மூவரும் நண்பா்கள்.

கடந்த சில நாள்களுக்கு முன்னா் அய்யனாா் தினேஷின் தங்கை குறித்து அவதூறாகப் பேசினாராம். இதை அவா் கண்டித்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா்கள் மூவரும் அங்குள்ள டி.சவேரியாா்புரம் பகுதியில் அமா்ந்து மது குடித்துள்ளனா். அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், தினேஷை மற்ற இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில் பலத்த காயம் அடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நண்பா்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.