தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் சசிக்குமாா் (29). இவா், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்த இளைஞா் ஒருவா் சசிக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா்.
இதில் பலத்த காயமடைந்த சசிக்குமரை அங்கிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
பின்னா், சசிக்குமாரை அரிவாளால் வெட்டியவரை பிடித்து விசாரித்தபோது, கோட்டூரைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வம் (44) என்பதும்,
இவரது மனைவியுடன் சசிக்குமாருக்கு பழக்கம் இருந்ததால் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

ஆலங்குளம், மானூர் அருகே அரிவாள் வெட்டு: 8 பேர் கைது

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



