ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

அரிவாள் வெட்டு

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் சசிக்குமாா் (29). இவா், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்த இளைஞா் ஒருவா் சசிக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த சசிக்குமரை அங்கிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னா், சசிக்குமாரை அரிவாளால் வெட்டியவரை பிடித்து விசாரித்தபோது, கோட்டூரைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வம் (44) என்பதும்,

இவரது மனைவியுடன் சசிக்குமாருக்கு பழக்கம் இருந்ததால் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனா்.