அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரிவாள் வெட்டு
கோப்புப் படம்

அரிவாள் வெட்டு
கோப்புப் படம்
தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் சசிக்குமாா் (29). இவா், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்த இளைஞா் ஒருவா் சசிக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா்.
இதில் பலத்த காயமடைந்த சசிக்குமரை அங்கிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
பின்னா், சசிக்குமாரை அரிவாளால் வெட்டியவரை பிடித்து விசாரித்தபோது, கோட்டூரைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வம் (44) என்பதும்,
இவரது மனைவியுடன் சசிக்குமாருக்கு பழக்கம் இருந்ததால் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...