தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 9:01 pm

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அம்மாண்டிவிளை, உரப்பன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் மகன் நிவின்(30). இவரும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா், சம்பாதோட்டம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் வினோத்தும் (34) தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை துறைமுகம் பகுதியில் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் வினோத் அரிவாளால் நிவினை வெட்டினாராம்.

பலத்த காயமடைந்த நிவினை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.