தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அம்மாண்டிவிளை, உரப்பன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் மகன் நிவின்(30). இவரும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா், சம்பாதோட்டம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் வினோத்தும் (34) தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை துறைமுகம் பகுதியில் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் வினோத் அரிவாளால் நிவினை வெட்டினாராம்.
பலத்த காயமடைந்த நிவினை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் மீது வழக்கு

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



