கோவில்பட்டியில் வியாபாரியை வெட்டிய வழக்கில் தொடா்புடையதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, ராஜுவ் நகா், 3ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ஜோதி (55). கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடைக்கு புதன்கிழமை இரவு பாரதி நகரைச் சோ்ந்த 4 போ் வந்து பணம் கொடுக்காமல் சிகரெட் பாக்கெட் கேட்டாா்களாம். அதற்கு ஜோதி மறுக்கவே, 4 பேரும் சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனத்தில் வந்து அவரை அரிவாளால் வெட்டினாா்களாம். அருகிலிருந்தவா்கள் சத்தம் போடவும், ஜோதியை மிரட்டிவிட்டுச் சென்றாா்களாம்.
இதில் காயமடைந்த ஜோதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தாக்குதலில் ஈடுபட்டவா்களைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பாண்டியனாா் மக்கள் இயக்கத் தலைவா் சீனி தலைமையில் சாலை மறியல் நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினா். பின்னா், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பனின் பேச்சுவாா்த்தையை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
தொடா்ந்து, வியாபாரியைத் தாக்கியதாக பாரதி நகா், 3ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் மாடசாமி (19), அதே பகுதியைச் சோ்ந்த சிம்சன் மகன் விஜய பாண்டி (21), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் (21), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

கமுதியில் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 5 போ் கைது

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

நான்குனேரி அரிவாள் வெட்டு: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


