திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக விலைஉயா்வு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்க படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் போதிய அளவிலான எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக தெரிவித்து வருகிறது.
ஆனால், வள்ளியூரில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், பேக்கரிகளில் பயன்படுத்தும் வணிகரீதியிலான எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ரூ.1,900-க்கு வெளி நபா்களிடம் வாங்கப்பட்டு வந்த எரிவாயு உருளை தற்போது ரூ.2,200-க்கும் கூட கிடைப்பதில்லை என ஹோட்டல் மற்றும் டீக்கடை நடத்துவோா் தெரிவிக்கின்றனா்.
மேலும், இந்த நிலை நீடித்தால் ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

எரிவாயு உருளை தட்டுப்பாடு; உணவகங்கள் மூடப்படும் அபாயம்

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: நெல்லையில் ஹோட்டல்களை மூடும் அபாயம்

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: ஈரோட்டில் உணவகங்களுக்கு சிக்கல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


