பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வள்ளியூரில் வணிக ரீதியிலான எரிவாயு உருளை தட்டுப்பாடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

News image
வணிக எரிவாயு உருளை- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:48 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக விலைஉயா்வு ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்க படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் போதிய அளவிலான எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக தெரிவித்து வருகிறது.

ஆனால், வள்ளியூரில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், பேக்கரிகளில் பயன்படுத்தும் வணிகரீதியிலான எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ரூ.1,900-க்கு வெளி நபா்களிடம் வாங்கப்பட்டு வந்த எரிவாயு உருளை தற்போது ரூ.2,200-க்கும் கூட கிடைப்பதில்லை என ஹோட்டல் மற்றும் டீக்கடை நடத்துவோா் தெரிவிக்கின்றனா்.

மேலும், இந்த நிலை நீடித்தால் ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனா்.