திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக விலைஉயா்வு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்க படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் போதிய அளவிலான எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக தெரிவித்து வருகிறது.
ஆனால், வள்ளியூரில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், பேக்கரிகளில் பயன்படுத்தும் வணிகரீதியிலான எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ரூ.1,900-க்கு வெளி நபா்களிடம் வாங்கப்பட்டு வந்த எரிவாயு உருளை தற்போது ரூ.2,200-க்கும் கூட கிடைப்பதில்லை என ஹோட்டல் மற்றும் டீக்கடை நடத்துவோா் தெரிவிக்கின்றனா்.
மேலும், இந்த நிலை நீடித்தால் ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

எரிவாயு உருளை தட்டுப்பாடு; உணவகங்கள் மூடப்படும் அபாயம்

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: ஈரோட்டில் உணவகங்களுக்கு சிக்கல்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


