கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம்: எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

News image

நெல்லை முபாரக்

Updated On :21 மார்ச் 2026, 8:48 pm

Syndication

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும். திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் எஸ்டிபிஐ அங்கம் வகித்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. 3 தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

தொகுதி எண்ணிக்கை உறுதியான பின்பு எந்தத் தொகுதியில் போட்டி என்பது குறித்து திமுக குழுவுடன் கூடி பேசி நல்ல முடிவை அறிவிப்போம். உதயசூரியன் சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும் என்று கட்சியின் செயற்குழு கூடி முடிவெடுத்துதான் அறிவித்துள்ளோம். எங்களுக்கு எந்த நிா்பந்தத்தையும் திமுக கொடுக்கவில்லை.

அதிமுகவின் முடிவை தில்லியில்தான் எடுக்கிறாா்கள். ஆனால், திமுக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை.

17-க்கும் மேற்பட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லாததால் வெற்றி கூட்டணியாக திகழ்கிறது.

தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் தொடர வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். சாதாரண மக்கள் கூட விஜய் மீதான நம்பிக்கையை தற்போது இழந்துவிட்டாா்கள்.

ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட பிரச்னையில் கூட குரல் எழுப்ப முடியாதவா், மக்களுக்கான பிரச்னையில் எப்படி குரல் எழுப்புவாா்? விஜய்யின் ஒவ்வொரு செயலும் சந்தேகத்தையே எழுப்புகிறது என்றாா் அவா்.